தூத்துக்குடி விமானத்தில் பா.ஜ.கவை எதிர்த்து கோஷமிட்ட சோபியாவுக்கு ஜாமீன் வழங்கியது தூத்துக்குடி நீதிமன்றம்.!!
பாசிச பாஜக ஒழிக என்று முழக்கமிட்ட சோபியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தமிழிசை சென்ற விமானத்தில் பாசிச பாஜக ஒழிக என்று முழக்கமிட்டதால் நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஜாமீன் கோரி அவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு அளித்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் பொது இடத்தில் இவ்வாறு பேச கூடாது என்று அறிவுரை கூறி நீதிபதி ஜாமீன் வழங்கினார்.