முன்னணி தமிழ் நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் இன்று வருமான வரி சோதனை.!!

சென்னை கீழ்ப்பாக்கம் சாலையில் உள்ள நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் இந்திய வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Continue Reading

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குள் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி.உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது..!!

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தற்போது மாத விடாயை காரணம் காட்டி 10 முதல் 50 வரை உள்ள பெண்களுக்கு சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மாதவிடாயை காரணம் காட்டி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது சம உரிமையை உறுதி செய்யும் அரசியல் சட்டத்தின் 14ஆம் பிரிவை மீறுவதாக உள்ளதென தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு […]

Continue Reading

ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையான ஜீரோ பாயிண்ட் வந்தடைந்தது சென்னை மக்கள் மகிழ்ச்சி !!

ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து  விநாடிக்கு 1200 கன அடி திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லை வந்தடைந்தது.. சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திர-தமிழக அரசுகளின் ஒப்பந்தத்தின் படி, ஆண்டிற்கு 2 தவணைகளாக, ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரும், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் வழங்க வேண்டும். கடந்த பருவத்தில், கண்டேறு அணையின் நீர் இருப்பு குறைவாக இருந்ததால், சென்னைக்கு தண்ணீர் […]

Continue Reading

திருவண்ணாமலையின் மனிதநேயமிக்க கலெக்டர்.!!

ஆரணி அடுத்த கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்த தாய் தந்தையரை இழந்து தம்பி தங்கைகளை காப்பாற்ற வாழ்வாதரம் இன்றி தவிப்பதாக மனுநீதிநாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் கண்ணீருடன் மனு அளித்த 19 வயதான செல்லி. ஆனந்தி. கனத்த இதயத்துடன் மனுவை பெற்று அரசு பணிக்கு 2 வயது குறைவாக இருப்பினும் சூழ்நிலை கருதி தலைமைச்செயலாளாரிடம்சிறப்பு அனுமதி பெற்று கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளராக பணிநியமன ஆணையை அவாரது இல்லத்திற்கே நேரில் சென்று வழங்கி அவர்களின் வீட்டில் மதிய […]

Continue Reading

இந்தியாவில் ஆதார் எண்  கட்டாயம் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது ..!!

  இந்தியாவில் ஆதார் எண்  கட்டாயம் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது ..!! அரசின் முக்கிய நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தியாவில் பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் அவசியம் என மத்திய அரசு கூறியிருந்தது. மத்திய அரசின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆதாருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் கடந்த […]

Continue Reading

சர்க்கார் படப்பிடிப்பில் இயக்குனர் முருகதாஸ் தன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.!!

‘சர்கார்’ படப்பிடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். அவருடன் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உடனிருந்தனர்.

Continue Reading

ஆப்கானுடன் இன்று மோதல்: இந்திய அணியில் முக்கிய வீரர்களுக்கு ஒய்வு இன்று .!!

ஆப்கானுடன் இன்று மோதல்: இந்திய அணியில் முக்கிய வீரர்களுக்கு ஒய்வு இன்று .!! ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் சம்பிரதாய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இந்திய அணி சந்திக்கிறது. ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் […]

Continue Reading

இரசாயன உரங்களின் விலை உயர்வு; விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் மத்திய அரசு வைகோ கண்டனம்.!!

இரசாயன உரங்களின் விலை உயர்வு; விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் மத்திய அரசு வைகோ கண்டனம்..!! பருவ கால மாறுபாடு, போதிய மழையின்மை, வறட்சி உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளில் சிக்கி வேளாண்மைத் தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. விவசாயிகள் வேளாண்மைத் தொழிலைக் கைவிட்டு வெளியேறும் அளவுக்கு கடும் நெருக்கடிகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலும் ஒரு பேரிடியாக விவசாயத்திற்குத் தேவையான இரசாயன உரங்களின் விலையேற்றம் விவசாயிகளை கடுமையாகப் பாதித்துள்ளது. சம்பா நெல் நடவுப் பருவத்தில் பயிருக்கு மணிச்சத்தும், தழைச்சத்தும் […]

Continue Reading

கமிஷனர் இன்று வடசென்னை யானை கவுளி பகுதியில் பல்வேறு பகுதியில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவை துவக்கி வைத்தார் !!

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் இன்று மாலை  C-2 யானைகவுனி காவல் நிலைய வளாகத்தில் யானைகவுனி காவல் நிலைய எல்லை பகுதியில் பொருத்தியுள்ள 300 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்தார். இதன் மூலம் யானைகவுனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 100 சதவீதம் இடங்கள் சிசிடிவி கேமராக்களின் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

டிவி நடிகை நிலானி தற்கொலை முயற்சி ஆல் அவுட் கொசு மருந்தை குடித்தார் !!

https://youtu.be/Bu9w_6w7H6U சென்னை, வளசரவாக்கத்தில் நடிகை நிலானி கொசு மருத்து குடித்து தற்கொலை முயற்சி – காதலன் காந்தி இறப்புக்கு காரணம் என குடும்பத்தினர் குற்றம் சாட்டியதால் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டதாக தகவல். இந்த சம்பவத்தை பார்த்து  அவரது 2 குழந்தைகள் கதறி அழுத காட்சி பரிதாபகரமாக இருந்தது.

Continue Reading