மதுரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக வேளாண்மை மசோதாவை திரும்பப் பெறக்கோரி வீதிவீதியாக நடந்த கையெழுத்து இயக்கம்.!!

தமிழகம்

மத்திய பாஜக அரசின் வேளாண் மசோதாவை திரும்பப் பெறக் கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம் வீதிவீதியாக இன்று காலை  மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக  நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவிக்கபட்டது. அதன்பின் வருகிற 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர்  சஞ்சய் தத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். உடன் மாவட்ட தலைவர்கள், மாநில, மாவட்ட, பகுதி, வார்டு நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *