புதுவை மாநிலத்தில் மேலும் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் செவ்வாய் காலை 9 மணி முதல் அமலுக்கு வந்ததால், அனைத்துவித கடைகளும், மதுக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.!!!!

மருத்துவம்

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த மே 10ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

இதன்படி, வழக்கம் போல் காலை 5 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை இயங்கிய காய்கறி, மளிகை, பால், மருந்துப் பொருட்கள் அடங்கிய அத்தியவசிய கடைகள் செவ்வாய்க்கிழமை முதல் மாலை 5 மணி வரை இயங்குவதற்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளன.

பிற அனைத்து வித கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. வழக்கம்போல் அத்தியவசிய பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.

தேனீர் கடைகள், உணவகங்களும் திறக்கப்பட்டு பார்சல் மட்டும் வழங்கப்படுகிறது. இவைகள் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படும்.

ஏற்கனவே மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வித சில்லரை மதுக்கடைகளும் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டதால், காலை 9 மணி முதல் மதுக்கடைகள் திறந்து இயங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *