சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்உதயநிதி ஸ்டாலின் கொரனோ தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து நிவாரண பொருட்களை வழங்கினார்.!!

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி,119வது வட்டம்,பேகம்சாகிப் தெருவில் கொரோனா தடுப்பூசி முகாமை இன்று சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.இதில் பங்கேற்ற 18வயதுக்கு மேற்பட்ட ஏராளமானவர்களுக்கு நிவாரணபொருட்களை வழங்கினார்.இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சிற்றரசு,திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் ஏ.ஆர்.பி.எம்.காமராஜ், திருவல்லிக்கேணி திமுக அவைத்தலைவர் கா.வே.செழியன் வட்ட செயலாளர் கா.வே.மோகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Continue Reading

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாற்று திறனாளிகளுக்கு கொரோனோ தடுப்பூசி முகாம் தொடங்கி வைத்தார்.!!

சென்னை ஆழ்வார்பேட்டை தனியார் மண்டபத்தில் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மாற்றுத்திறனாளிக்கான தடுப்பூசி போடும் முகாமை இன்று தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் தடுப்பூசி பெறுவதற்கு தனியாக ஒரு பிரிவு தோற்றுவிக்கப்பட்ட வேண்டும் என்று தமிழக அரசு கடந்த மே 16-ம் தேதி உத்தரவிட்டது. மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைத்து செயல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில்,மாற்றுத் திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை முதல்-அமைச்சர் […]

Continue Reading

சர்வதேச விருதுகளை அள்ளி குவித்த சின்னஞ்சிறு கிளியே திரைப்படம் அவுட்ஸ்டேண்டிங் அச்சீவ்மெண்ட் விருது சிறந்த அறிமுக இயக்குனர் விருது.!!

சர்வதேச விருதுகளை அள்ளி குவித்த சின்னஞ்சிறு கிளியே திரைப்படம் அவுட்ஸ்டேண்டிங் அச்சீவ்மெண்ட் விருது சிறந்த அறிமுக இயக்குனர் விருது சிறந்த குடும்பம் மற்றும் குழந்தைகளுக்கான திரைப்பட விருது இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர் விருது சிறந்த இந்திய திரைப்பட விருது சிறந்த இயக்குனர் ஸ்பெஷல் ஜூரி விருது போன்ற பல்வேறு விருதுகளை பல்வேறு இன்டர்நேஷனல் பெஸ்டிவலில் வென்றுள்ளது. இப்படம் தந்தை மகளுக்கான பாசத்தை மையமாக கொண்டு தற்கால சூழ்நிலையில் ஆங்கில மருத்துவத்தின் விபரீதத்தையும் ஒரு சேர சொல்லும் […]

Continue Reading

கொரோனாவுக்கு எதிரான தற்போதைய போராட்டத்தில், கரும்பூஞ்சை நோய் புதிய சவாலாக தோன்றியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.!!

கொரோனாவுக்கு எதிரான தற்போதைய போராட்டத்தில், கரும்பூஞ்சை நோய் புதிய சவாலாக தோன்றியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.!! கொரோனா தடுப்பூசி, மக்களுக்காக சேவை செய்யும் நமது முன்களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பை வழங்கியுள்ளது. வரும் நாட்களில், அனைவருக்கும் தடுப்பூசி பாதுகாப்பை விரிவுப்படுத்துவோம். கொரோனாவுக்கு எதிரான நமது தற்போதைய போராட்டத்தில், கரும்பூஞ்சை நோய் புதிய சவாலாக தோன்றியுள்ளது. இதனை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Continue Reading

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பணி ஆணைகளை வழங்கினார்.!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பணி ஆணைகளை வழங்கினார்.!! தூத்துக்குடி #Sterlite ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோரின் வாரிசுகள், கொடுங்காயமுற்றோர் என 17 பேர்களுக்கு அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசுப் பணி நியமன ஆணைகளை இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்கி ஆறுதல் கூறினார்

Continue Reading

ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ்-சென்னை மாநகராட்சி இணைந்து இலவச கொரோனோ தடுப்பூசி முகாம் செம்மொழிப் பூங்காவில் நடைபெற்றது.!!

ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ்-சென்னை மாநகராட்சி இணைந்து இலவச கொரோனோ தடுப்பூசி முகாம் மத்திய சென்னையில் அமைந்துள்ள செம்மொழி பூங்காவில் நடைபெற்றது. இதில் 700க்கும் அதிகமானோர் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.இந்த பிராமாண்ட கொரேனோ தடுப்பூசி முகாமில் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் முதன்மை நிர்வாகிகள் எஸ்.கபில் சாட்லே, பி.பி.பிரசாத், ரிலையன்ஸ் ரவிசுந்தரம், பி.வி.மோகன்ராமன்,டாக்டர் ரபீக், டாக்டர் கொளதம், சஞ்சய், வினோத்குமார், ரத்தன்,ஒய்வு பெற்ற காவல்துறை கண்காணிப்பாளார்,சிவலிங்கம், சென்னை மாநகராட்சி 9வது மண்டல சுகாதார துறை அதிகாரி டாக்டர் […]

Continue Reading

S.R.M. கல்வி குழுமங்களின் சார்பில் அதன் இணை வேந்தர் பி.சத்திய நாராயணா கொரோனோ நிவாரண பணிகளுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் 1 கோடியே 10 லட்சம் வழங்கினார் .!!

S.R.M கல்வி குழுமம் சார்பில் கொரோனோ நிவாரண பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் முதலமைச்சரின்பொது நிவாரண நிதிக்கு ஆர்.டி.ஜி.எஸ் மூலமாக 1கோடியே 10 லட்சம் வழங்கியதற்கான கடிதத்தை முதல்வர் மு.க. ஸ்டாலிடம் S.R.M அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இணை வேந்தர் பி. சத்திய நாராயணா வழங்கினார்.உடன் S.R.M.கல்வி குழுமங்களின் தலைவர்கள் சிவகுமார்,நிரஞ்சன் ஆகியோர் இருந்தனர்.  

Continue Reading

செய்தித் துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதனை இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்க மாநில நிர்வாகிகள் சந்தித்தனர்.!!

செய்தித் துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதனை இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் மோகன் தாரா, மாநில செயலாளர் சங்கர், மாநில இணைச் செயலாளர் ஸ்பைடர் சீனிவாசன், மாநில செயற்குழு உறுப்பினர் நூதன் பிரசாத் ஆகியோர் தலைமை செயலகத்தில் இன்று சந்தித்து பேசினர். சட்டமன்ற கூட்டத் தொடரில் குறைந்த எண்ணிக்கையில், குறிப்பிட்ட சில நிருபர்களை துறையின் ஒருசிலரின் விருப்பத்திற்கேற்ப சபையில்  அனுமதிப்பதால் சில செய்தியாளர்கள் செய்தி எடுக்க முடியாமல் தவித்து வருவது குறித்தும், கடந்த காலத்தில் பத்திரிகையாளர்களிடையே […]

Continue Reading

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அன்னதான திட்டத்திற்கு ஸ்ரீ ராம ஜெயா ட்ரஸ்ட் மூலம் ரூபாய் 7 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது இதை அறநிலை துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு பெற்றுக்கொண்டார்.!!

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அன்னதான திட்டத்திற்கு ஸ்ரீ ராம ஜெயா ட்ரஸ்ட் மூலம் ரூபாய் 7 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இதனை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பெற்றுக்கொண்டார் அருகில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் செயலாளர் திரு.விக்ரம் கபூர் இ.ஆ.ப.ஆகியோர் கலந்து கொண்டனர்.

Continue Reading

தமிழக முதல்வராக பதவி ஏற்க போகும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் உதயநிதி ஸ்டாலினையும் சென்னை நகர & மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து கூறினார்.!!

தமிழக முதல்வராக பதவி ஏற்க போகும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் உதயநிதி ஸ்டாலினையும் சென்னை நகர & மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.!! தமிழக முதல்வராக பொறுப்பேற்க போகும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களையும் சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் உதயநிதி ஸ்டாலின்அவர்களையும் சென்னை மாநகர & மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமிராமநாதன் அவர்கள் […]

Continue Reading