11-ம் 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11-ம் வகுப்பு சேர்க்கை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.!!!

பல்வேறு தரப்பினர் கோரிக்கையை ஏற்று 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், குறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்கு அதிக விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் 10ஆம் வகுப்பு பாடத்தின் அடிப்படையில் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்தலாம் எனத்  தெரிவித்திருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 11-ம் வகுப்புக்கு நுழைவு தேர்வு என்ற அறிவிப்பை திரும்பப் பெறுமாறு பலரும் கோரிக்கை விடுத்தனர். […]

Continue Reading

ஜூன் 21ஆம் தேதி கூடுவதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று அறிவித்தார்.!!!

சென்னை கலைவாணர் அரங்கம். ஜூன் 21ஆம் தேதி கூடுவதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு  இன்று அறிவித்தார்.இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜூன் 21ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது எனத் தெரிவித்தார். முன்னதாக பேரவைக்கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து உறுப்பினர்களுக்கும் சமவாய்ப்பு அளித்து பேரவைக் கூட்டத்தை நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் விரும்புவதாகத் தெரிவித்த பேரவைத் தலைவர் அப்பாவு கூட்டத்தொடரை […]

Continue Reading

ஜூன் 21 முதல் புதிய தடுப்பூசி கொள்கை அமலாக உள்ள நிலையில், கொரோனா தடுப்பூசிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.!!!

ஜூன் 21 முதல் புதிய தடுப்பூசி கொள்கை அமலாக உள்ள நிலையில், கொரோனா தடுப்பூசிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முதல் அலையில் இருந்து மெல்ல மீண்டதன் மூலம் பெற்ற சிறிய நம்பிக்கையையும் இந்த 2-வது அலை சீரழித்துவிட்டது. அன்றாடம் நிகழும் பல்லாயிரக்கணக்கான பாதிப்புகளும், மரணங்களும் நூற்றாண்டுகளில் இல்லாத பேரழிவுக்கு சாட்சியாக மாறியிருக்கின்றன. இப்படி சொல்ல முடியாத துயரத்தில் தள்ளப்பட்டிருக்கும் மக்களை, அதில் இருந்து மீட்டெடுப்பதற்காக மத்திய-மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கைகளை முடுக்கி விட்டு வருகின்றன. […]

Continue Reading

இன்று ஒரே நாளில் 25க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்-தலைமை செயலர் வெ.இறையன்பு அறிவிப்பு.!!!

25 ஆட்சிப்பணி அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் தலைமை செயலர் வெ.இறையன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மாநகராட்சி ஆணையராக கே.பி.கார்த்திகேயன் அவர்களும், சேலம் மாநகராட்சி ஆணையராக கிறிஸ்துராஜ் அவர்களும், திருப்பூர் மாநகராட்சி ஆணையராக கிராந்திகுமார் அவர்களும், நெல்லை மாநகராட்சி ஆணையராக விஷ்ணு சந்திரன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கோவை மாநகராட்சி ஆணையராக ராஜகோபால் சங்கரா அவர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி துணை ஆணையராக சினேகா, பிரசாத், நர்னவாரே மனீஷ் சங்கர்ராவ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 17 ஐஏஎஸ் […]

Continue Reading

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “பிரதமர் மோடி 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று சம்பந்தமாக உரையாற்றினார்.!!!

அவரது உரையில் தடுப்பூசி திட்டத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை மாற்றி, தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக கொடுக்கும் என்று கூறியுள்ளார். இது வரவேற்கத்தக்கது. புதுவையில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்திருக்கும் காரணத்தினால் மதுக்கடைகள் உட்பட அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அண்டை மாநிலமான தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. மாநில எல்லையில் உள்ள மதுக்கடைகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து […]

Continue Reading

அமைச்சர்கள் மா.சுப்ரமணியம்.பி.டி.ஆர்.தியாகராஜன் ஆகியோர் கொரோனா பேரிடர் காலத்தில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு 3000 உணவு பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சி.!!

    கொரோனா பேரிடர் காலத்தில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு 3000 உணவு பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று  வேளச்சேரி குருநானக் கல்லூரியில் தமிழ்நாடு காவல் வீட்டு வசதி கழகம்-தலைவர் .ஏ.கே.விஸ்வநாதன், இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது. இதனை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் .மா.சுப்பிரமணியன், நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் ஆகியோர் பார்வையிட்டனர். இந்நிகழ்வில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.அரவிந்த் ரமேஷ், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை […]

Continue Reading

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலை அமைந்துள்ளது.!!!

ஹட்சன் ஆற்றின் துறைமுகத்தில் உள்ள லிபர்ட்டி தீவில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர தேவி சிலை 305 அடி உயரமும், 204.1 டன் எடையும் கொண்டது. சுதந்திர தேவி சிலை லிபர்ட்டி தீவில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர தேவி சிலை 305 அடி உயரமும், 204.1 டன் எடையும் கொண்டது. அமெரிக்கா சுதந்திரம் அடைந்து நூறாண்டு ஆன போது பிரான்ஸ் நாடு சுதந்திர தேவி சிலையை வடிவமைத்து அமெரிக்காவுக்கு பரிசாக வழங்கியது.

Continue Reading

தமிழகத்திற்கு .03 லட்சம் கோவேக்சின்கள் வரவுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.!!!

தமிழகத்திற்கு அடுத்த இரண்டு நாள்களில் 1.03 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகள் வரவுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாளில் தமிழகத்திற்கு 1,03,370 கரோனா தடுப்பூசிகள் வரவுள்ளதாக தெரிவித்துள்ளனர். மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில் பல தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த நாளை 63,370 கோவேக்சின் தடுப்பூசிகள் வரவுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த நாளை 40,000 கோவேக்சின் தடுப்பூசிகள் […]

Continue Reading

மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.!!!

மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும்,  பேராசிரியர் ம. விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில்,  மு.தீனபந்து இ.ஆ.ப, (ஓய்வு), டி.ஆர்.பி. இராஜா, மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர், மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜோ.அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன் மற்றும் முனைவர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோர் பகுதி நேர உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Continue Reading

மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை(ஜூன் 9) பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது.!!!

மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை(ஜூன் 9) பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது. நாட்டில் கரோனா இரண்டாம் அலை குறைந்து வரும் சூழலில் நாளை காலை 11 மணிக்கு காணொலி மூலம் மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி அறிவித்த மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி, தீபாவளி வரை இலவச உணவு தானியங்கள் உள்ளிட்டவை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது.

Continue Reading