ஊட்டி மலை ரயில் பழுது காரணமாக நடுவழியில் நின்றது.!!

ஊட்டி மலை ரயில் பழுது காரணமாக பாதி வழியில் நின்றதால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர். நேற்று காலை 60 பயணிகளுடன் சென்ற டீசல் எஞ்ஜின் மலை ரயில் அருவங்காடு பகுதியில் எஞ்சின் பழுதானதால்  பாதி வழியில் நின்றது. உடனடியாக, ரயில்வே ஊழியர்கள் பழுதை சரி செய்ய முடியாததால், குன்னுார் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் மாற்று எஞ்ஜின் வரவழைக்கப்பட்டு பழுதாகி நின்ற ரயிலில் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டது. அதனையடுத்து 2 மணி நேர தாமதத்திறகு பிறகு ரயில் […]

Continue Reading

சென்னையில் இன்று நடந்த அதிமுக செயற்குழுவில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.!!

இன்று சென்னை ராயப்பேட்டையில் நடந்த அதிமுக செயற்குழுவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் , அவைத்தலைவர் மதுசூதனன் உள்பட அதிமுக மந்திரிகள், எம்.எல்.ஏ க்கள் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம். ஒருமனதாக நிறைவேற்ற பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூட எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் மறைவுக்கு அதிமுக செயற்குழுவில் இரங்கல் தீர்மானம். நிறைவேற்றபட்டது.. கேரள […]

Continue Reading

சென்ன மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவிற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடிபழனிசாமி.!!

சென்ன மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவிற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நினைவு வளைவு அமைப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். காமராஜர் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே வளைவு அமைக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் துணை முதல்வா் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் 66 அடி அகலமும், 55 அடி உயரமும் கொண்டதாக எம்ஜிஆர் நினைவு வளைவு அமைக்கப்பட உள்ளது. அழகிய கலைநயத்துடன் […]

Continue Reading

டெல்லியில் தமிழிசை சவுந்திரராஜன் வாஜ்பாய் அஸ்தியை பெற்றுக் கொண்டு தமிழகம் வருகிறார் !!

டெல்லியில் இன்று பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வாஜ்பாய் அஸ்தியை பெற்றுக் கொண்டார். இதன்பிறகு, நிருபர்களிடம் தமிழிசை கூறியதாவது: சென்னை கமலாலயத்தில் ஏராளமான பா.ஜ.க தொண்டர்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வாஜ்பாய் அஸ்தி வைக்கப்படும். இதன்பிறகு 6 தலைவர்கள் தலைமையில், 6 வண்டிகளில் அனைத்து மாவட்டங்களுக்கும் அஸ்தி கொண்டு செல்லப்படும். 26ம் தேதி 3 கடல், 3 நதிகளில் கலக்கப்படும் என கூறினார்.

Continue Reading

நடிகை ஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி படம் விரைவில் வெளிவருகிறது

ஜோதிகா -இயக்குனர் ராதா மோகன் கூட்டணியில் காற்றின் மொழி 36 வயதினிலே ,மகளீர் மட்டும் , நாச்சியார் படங்கள் மூலம் ஹாட்ரிக் அடித்த ஜோதிகா அடுத்த படத்தின் வெற்றிக்கான முயற்ச்சியில் ‘துமாரி சுலு’ என்ற சூப்பர் ஹிட் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான “காற்றின் மொழி “படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் 18-ம் தேதி திரைக்கு வருகிறது .மொழி படத்தின் மூலம் பெரிய வெற்றியை கண்ட அதே இயக்குனர் ராதா மோகன் மற்றும் ஜோதிகா கூட்டணி […]

Continue Reading

இன்று பக்ரீத் திருநாள் விழா. சென்னையில் பல்வேறு இடங்களில் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.!!

இஸ்லாம் சகோதர சகோதரிகளுக்கு பக்ரீத் தியாகத்திருநாள் வாழ்த்துக்கள் உலக நாடுகள் முழுவதும் இஸ்லாம் சமயத்தவர்கள் இறைத்தூதர் இப்ராஹிம் மற்றும் அவரது புதல்வன் அவர்களது புனிதமும் அர்ப்பணிப்பும் ஒருங்கே இணைந்த வாழ்வை எண்ணி தியாகத்தின் மேன்மையைப் போற்றும் நல்லதொரு நாள் பக்ரீத் பலியிடல் தியாகத் திருநாளின் ஒரு சிறப்பம்சம் ஆகும். இந்த நாளில் இசுலாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிடுகின்றனர். பின்னர் அதன் இரைச்சியை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு […]

Continue Reading

ஓணம் விழாவை ஒட்டி யாரும் சபரிமலைக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம் பாதைகள் சேதமடைந்திருக்கின்றன என தேவசம்போர்டு அறிவிப்பு.!!.

*ஓணத்தையொட்டிப் பக்தர்கள் யாரும் சபரிமலை கோவிலுக்கு வரவேண்டாம் – திருவிதாங்கூர் தேவசம் போர்டு!* சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் சாலைகள் கடுமையாச் சேதமடைந்துள்ளதால் பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் எனத் திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது. ஆண்டுதோறும் ஓணம் திருநாளையொட்டி வழிபாட்டுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பக்தர்கள் செல்வது வழக்கம். மழை வெள்ளம் மண்சரிவு ஆகியவற்றால் கேரளம் முழுவதும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் சாலைகள் சேதமடைந்துள்ளதாகவும், பல இடங்களில் மரங்கள் வேருடன் […]

Continue Reading

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு தான் சைக்கிள் வாங்க உண்டியலில் சேர்த்த பணத்தை வழங்கிய பள்ளி மாணவிக்கு ஹீரோ சைக்கிள் நிறுவனம் இலவசமாக புதிய சைக்கிள் வழங்கியது!!

  விழுப்புரத்தை சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி அனுப்பிரியா கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு சைக்கிள் வாங்க உண்டியிலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை வழங்கிய பள்ளி சிறுமியை பாராட்டி அவரது ஆசையை பூர்த்தி செய்ய ஹீரோ சைக்கிள் நிறுவனம் அவருக்கு புதிய சைக்கிள் வழங்கியது

Continue Reading

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலையின் கருத்திற்கு வைகோ கடும் எதிர்ப்பு.!!

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் கருத்துக்கு வைகோ கடும் எதிர்ப்பு தூத்துக்குடி ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலை குறித்த வழக்கு, டெல்லியில் உள்ள தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கோயல் தலைமையிலான அமர்வில் இன்று (20.08.2018) விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலை தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம், அரசியல் கட்சிகளின் தூண்டுதலால்தான் தூத்துக்குடியில் போராட்டம் நடந்தது. பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வந்து கலவரத்தை ஏற்படுத்தினர். இங்கு வந்துள்ள வைகோ போன்ற […]

Continue Reading

கோவையில் மூப்பனார் பிறந்த நாள் விழாவில் ஜி.கே.வாசன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன!!

கோவையில் ஜி.கே.மூப்பனார் பிறந்தநாள் விழா விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டது விழாவில் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில் கோவை மாவட்ட சார்பில் ஜி.கே.வாசன் கொடியத்து அசைத்து அனுப்பிய போது எடுத்த படம் அருகில் மூத்த துணைத்தலைவர் ஞானதேசிகன் கோவைத்தங்கம் தலைமை நிலையச்செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ் மாவட்டத்தலைவர்கள் ஜவஹர் வாசன் குணசேகரன் ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Continue Reading