தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அமெரிக்காவில் ‘இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.!!

சென்னை

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அமெரிக்காவில் ‘இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் செயல்படும் குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர் நிறுவனம் வழங்கும் இந்த விருதை, சிகாகோ நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் அமெரிக்க நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட செனட்டர் ராஜா கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். உலக அளவில் பல துறைகளில் சிறப்பாகச் செயல்படும் நபர்களைத் தேர்வு செய்து குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர் நிறுவனம் இந்த விருதை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு, மருத்துவம், சமூகம், அரசியல் துறைகளில் இயங்கி வரும் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விருது பெற்றுக் கொண்டு பேசிய தமிழிசை, ”தமிழ்ப் பெண்ணான நான் அமெரிக்காவில் தமிழரான செனட்டரின் கைகளால் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விருதை தமிழக மக்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். மக்களுக்காக மேலும் சிறப்பாக செயல்பட இந்த விருது ஊக்கமளிக்கிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *