புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு அமெரிக்கா இரங்கலை தெரிவித்துள்ளது
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை வாகனம் மீது தீவிரவாதி ஒருவர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வீரர் சுப்பிரமணியன் பலியானார்
தீவிரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கும் என கூறியுள்ளார்.S