அமெரிக்காவில் அவசரநிலை அறிவிக்கப்படுமா.!!

சென்னை

மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப வேண்டிய நிதியை பெறுவதற்காக அமெரிக்க அதிபர் அவசர நிலையை பிரகடனம் செய்ய உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார் 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எல்லையில் சுவர் எழுப்பவதற்கு நிதியை பெறுவதற்கான மசோதாவில் கையெழுத்திட உள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் அவசர நிலையை பிரகடனப்படுத்த உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.  
ஆனால் ட்ரம்பின் இந்த முடிவை ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இது சட்டத்துக்கு முரணானது என்று கூறியுள்ளனர்.

தெற்கு மெக்சிகோ எல்லை வழியாக, அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக அகதிகள் வருகின்றனர்.

இதைத் தடுக்க சுவர் எழுப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தி வந்த நிலையில் தேசிய நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ய உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

SRI 🇮🇳 செய்தி குழுமம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *