தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
திட்டப்பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு தற்போது சிதிலமடைந்த
நிலையிலுள்ள குடியிருப்புகளை அகற்றி மறுகட்டுமான திட்டத்தின் கீழ் புதிய குடியிருப்புகள்
கட்டுவதற்கான பணிகளை மாண்புமிகு ஊரக தொழில்துறை அமைச்சர்
தா.மோ.அன்பரசன் அவர்கள், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்
தயாநிதி மாறன் மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்
அவர்களுடன் இணைந்து இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
ஆய்வின் போது சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம்
பள்ளி சிறுமி கோரிக்கை மனு அளித்தார்.