ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு நடிகர் விஜய் சேதுபதி 5 லட்சம் வழங்கினார்.

சென்னை

இந்தியாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ள

ஆசிய தடகள போட்டியில் தங்க பதக்கத்தை வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி 5 லட்சம் ரூபாய் காசோலையை தனது ரசிகர் மன்றம் சார்பில் வழங்கியுள்ளார்.

இந்த காசோலையை கோமதி வசிக்கும் திருச்சியை சேர்ந்த முடிகண்டம் பகுதியில் விஜய் சேதுபதி ரசிகர் தலைமை மன்ற செயலாளர் குமரன், மற்றும் சில முக்கிய மாவட்ட தலைவர்கள் ஆகியோர் நேரில் சென்று காசோலையை வழங்கியுள்ளனர்

மேலும் இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் லாபம் படப்பிடிப்பில் இருந்த விஜய் சேதுபதிதொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட கோமதி தனது நன்றியை நன்றியை தெரிவித்துக் கொண்டார் . மேலும் பல போட்டிகளில் கலந்து கொண்டும் ஒலிம்பிக் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்றும் விஜய் சேதுபதி அவரை வாழ்த்தினார்

.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *