அதிமுக தோல்விக்கு காரணம் பாஜகவுடன் கூட்டணி வைத்தது தான் அமைச்சர் சி.வி சண்முகம் பேச்சு.!!

தமிழகம்

விழுப்புரத்தில் வானூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். பாரதிய ஜனதா கூட்டணியால் அதிமுக தோல்வி அடைந்தது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்று யாரும் ஓட்டு போடவில்லை. மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் மாநிலத்தில் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்று முடிவு செய்துதான் மக்கள் ஓட்டு போட்டு உள்ளனர்.இந்த தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால்தான் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது. சிறுபான்மை ஓட்டுகளை இழந்ததற்கு காரணமே பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்தது தான். தேர்தல் தோல்விக்கு அதுவும் ஒரு காரணம்.இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். இக்கூட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், வானூர் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான அதிமுக தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக குவிந்திருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *