நள்ளிரவில் வெளியாகும் என தெரிகிறது அஜித்தின் நேர்கொண்ட பார்வை.!!

தமிழகம்

நள்ளிரவில் வெளியாகும் என தெரிகிறது அஜித்தின் நேர்கொண்ட பார்வை.!!

தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. திரையரங்குகள் வணிக நிறுவனங்களில் அடங்கும் என்பதால், இனி 24 மணி நேரமும் படங்களை திரையிட முடியும். எனினும், தியேட்டர் நிர்வாகங்கள் இதற்கான முன் ஏற்பாடுகளை செய்ய வேண்டியது இருப்பதால், புதிய விதிமுறைப்படி படங்களை திரையிட சற்று காலம் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள ரோஹினி திரையரங்கம், “நேர்கொண்ட பார்வைக்கு தயாரா”என்று ட்வீட் செய்துள்ளது. இதனால், அந்தப்படம் நள்ளிரவில் திரையிட வாய்ப்பு அதிகமாக இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *