பிரபல நகைச்சுவை நடிகர் கிரேசி மோகன் காலமானார்.!!

தமிழகம்
(சாக்லேட் கிருஷ்ணா நாடகத்தில் கிரேசி மோகன்)
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் கிரேசி மோகன்

சென்னை மந்தைவெளி பகுதியில் வசித்து வந்த காமெடி நடிகர் கிரேசி மோகனுக்கு இன்று கடுமையான நெஞ்சுவலி வந்தது சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைக்கு பின் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. அவர் மறைந்த செய்தியை கேட்டு ஏராளமான நாடக நடிகர்களும், சினிமா நடிகர்களும் காவேரி மருத்துவமனையில் குவிந்தனர். நடிகர் கமல் காவேரி மருத்துவமனை வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார்

கிரேசி மோகன் வாழ்க்கை குறிப்பு.!!

1952ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவர் ஒரு காமெடி நடிகராக நமக்கு அறிமுகம் ஆனார். ஆனால் இவர் உண்மையில் இரு கதையாசிரியர். சென்னை அண்ணா யூனிவர்சிட்டியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தவர். 1972ஆம் ஆண்டு அந்த கல்லூரியில் தமிழ் மன்றத்திற்காக ஒரு கதை எழுதி நாடகத்தை அரங்கேற்றினார்.

இந்த கதையை பாராட்டி நடிகர் கமல்ஹாசன் அவருக்கு பரிசினை வழங்கினார். அன்றிலிருந்து கிரேசி மோகன் கதையாசியரியராக மாறிவிட்டார். பின்னர் இவர் எழுதிய 30 நாடகங்கள் 6000 முறை மேடை ஏறியுள்ளது. மேலும், பல படங்களுக்கு டயலாக் எழுதினார்,

சதி லீலாவதி
காதலா காதலா
மைக்கேல் மதன காமராஜன்
இந்தியன்
அவ்வை சண்முகி
தெனாலி
பஞ்சதந்திரம்
வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்

என பல படங்களுக்கு கதை மற்றும் திரைக்கதை, வசனம் எழுதினார். இவருக்கு அர்ஜூன் என்ற மகன் இருக்கிறார். அர்ஜுனுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு ஹரிதா என்பவருடன் திருமணம் ஆனது. இந்த திருமணத்திற்கு பல திரை பிரபலங்கள் வந்ததிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *