வடசென்னை அதிமுக மூத்த நிர்வாகி பாஜகவில் இணைந்தார்.!!

தமிழகம்

வடசென்னை மூத்த அதிமுக நிர்வாகி கிரி நாத் பாஜகவில் இணைந்தார்..!!

வடசென்னை அ.தி.மு.கவின் மூத்த நிர்வாகியான வடசென்னை தெற்கு மாவட்ட பொருளாளரும் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் 2வது மண்டல தலைவராக இருந்த கிரிநாத் அவர்கள் பா.ஜ.க மாநில தலைவர் எல். முருகன் முன்னிலையில் பா.ஜ.க கட்சியில் தனது ஆதரவாளர் களோடு இணைந்தார்.இந்நிகழ்ச்சியில் பாஜக தலைமை நிர்வாகி கரு. நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.அதிமுகவில் முழு ஈடுபாட்டோடு அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய கிரி நாத் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததால் வடசென்னை அதிமுகவினரும்,திமுகவினரும் அதிர்ச்சி அடைந்தனர்.கிரி நாத் அவர்கள் கூறியதாவது அதிமுகவில் எந்த அளவு அர்ப்பணிப்பு உணர்வோடு பணி புரிந்தேனோ அதைவிடசிறப்பாக பாஜகவுக்கு பணியாற்றுவேன் என அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *