தேசிய திருநங்கைகள் தினத்தையொட்டி திருநங்கைகள் அமைப்பின் நிர்வாகிகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தனர்.!!

தமிழகம்

இந்தியாவிலேயே முதன்முறையாக திருநங்கைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் திமுக ஆட்சியில் கலைஞர் கருணாநிதி ஏப்ரல் 15-ம் தேதி நலவாரியம் அமைத்து தந்தார்கள். மேலும் திருநங்கைகளை இந்திய அளவில் மூன்றாம் பாலினமாக அறிவித்த உச்ச நீதிமன்றம் வழங்கிய நால்சா தீர்ப்பும் ஏப்ரல் 15-ந்தேதி தான் வழங்கப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த நாளை இந்தியா முழுவதும் உள்ள திருநங்கைகள் *தேசிய திருநங்கைகள் தினமாக* கொண்டாடி வருகிறார்கள்.

இதனை முன்னிட்டு இன்று திமுக தலைவர் ஸ்டாலினை தோழி திருநங்கைகள் அமைப்பின் தலைவர் டாக்டர். S. சுதா, திருச்சங்கோடு திமுக ஒன்றிய கவுன்சிலர் திருநங்கையர் ரியா, சமூக செயற்பாட்டாளர் போனு துர்கா @ நஸ்ரியா ஆகியோர் நேரில் சந்தித்து மலர் கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றனர்.திருநங்கையர் தினம் குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின்மு க ஸ்டாலின் இன்று அறிக்கை விடுத்துள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கையில்

*திருநங்கையர் அனைத்து நிலைகளிலும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதை நினைவூட்டும் திருநங்கைகள் தினம் இன்று –

*திருநங்கை எனும் சொல்லுக்கு அரசின் அங்கீகாரம் அளித்து, தனி வாரியம் அமைத்தவர் கருணாநிதி*

*முன்னாள் முதல்வர் கருணாநிதி வழியில் திருநங்கையர், திருநம்பியர் உரிமைகளை திமுக என்றென்றும் காத்து நிற்கும் – என ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *