ஜி.கே.எம்.அரிமா சங்கம் சார்பாக முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கினார்கள்.!!
ஜி.கே.எம்.அரிமா சங்கம் சார்பாக ஏழை எளியவர்களுக்கு கொரோனோ காலகட்டத்திலும் அதற்கு முன்பாகவும் பல வருடங்களாக பல்வேறு நலத்திட்டங்கள் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் செய்து வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக சென்னை பாரிமுனையில் உள்ள புனித அந்தோனியர் முதியோர் காப்பகத்தில் த.மா.கா தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ் மதிய உணவை வழங்கினார். உடன் அரிமா சரவணன், சகாயராஜ் ரவி, காமராஜ்,ரகு, முன்னாள் கவுன்சிலர் பாபு, குமார், ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.