புத்த பூர்னிமாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த காணொளி சந்திப்பில் பேசிய மோடி “நம் முன்கள பணியாளர்கள் அனைவரும், ஒவ்வொரு நாளும் மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக தங்கள் உயிரை பணயம் வைக்கின்றார்கள். அவர்களுக்கு என்னுடைய வணக்கங்கள். இந்த இக்கட்டான கொரோனா நேரத்தில் பணியாற்றி, கொரோனாவால் இறந்த முன்கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு, எனது இரங்கல்கள்.
இதில் பேசிய பிரதமர் மோடி, “கொரோனாவுக்கு பின் – கொரோனாவுக்குப் முன் என்றே நிகழ்வுகள் அனைத்தையும் நாம் வழங்க வேண்டியிருக்கும். அந்தளவுக்கு மோசமான தாக்கங்களை ஏற்ப” எனக்கூறியிருக்கிறார்.
கொரோனாவை எதிர்க்க உதவும் தடுப்பூசிகளை கண்டறிந்த விஞ்ஞானிகளை நினைத்து, இந்த நாடு மிகவும் பெருமைப்படுகிறது. கடந்த ஆண்டைவிடவும், இந்த ஆண்டு கொரோனா பற்றிய புரிதலும், அதை தடுக்கும் வழிமுறைகளும் அதிகம் கிடைத்துள்ளது.