கொளத்தூர் தொகுதி சார்பாக சென்னைக்கு 20 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் எம்எல்ஏக்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தொகுதியின் சார்பில் அந்தந்த பகுதிகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்க முதல்வர் அறிவுறுத்தியிருந்தார்.
அதனடிப்படையில் தன்னுடைய கொளத்தூர் தொகுதி சார்பாக சென்னை மாநகராட்சிக்கு 20 ஆக்சிஜன் செறிவூட்டிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை பெருநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் வழங்கினார்.