மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தற்போது சென்னை நகரில் எடுத்துள்ள அளவீட்டின்படி நகரில் காற்று மாசு பெருமளவு குறைந்துள்ளது.!!!

சென்னை

ஊரடங்கால் வெறிச்சோடிய சாலை

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தற்போது சென்னை நகரில் எடுத்துள்ள அளவீட்டின்படி நகரில் காற்று மாசு பெருமளவு குறைந்துள்ளது.

சென்னை:

இன்றைய உலகில் தொழிற்சாலைகள், போக்குவரத்து காரணமாக ஏற்படும் புகை உள்பட பல்வேறு காரணங்களால் காற்று மாசு ஏற்படுகிறது.

சென்னை நகரிலும் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வாகனங்களில் செல்வோருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுபோல் நகரின் அனைத்து பகுதிகளிலும் காற்று மாசு பெருமளவு குறைந்து இருக்கிறது. தி.நகர் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளிலும் காற்று மாசு பெருமளவு குறைந்து இருக்கிறது.

சராசரியாக சென்னை நகரில் காற்று மாசு 27 சதவீதம் குறைந்து இருக்கிறது. புறநகர் பகுதியில் உள்ள பெரும்பாலான ஆலைகளில் பணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை புறநகர் பகுதிகளிலும் காற்று மாசு குறைந்துள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *