தமிழகத்தில் ஜூன் 3 முதல் 6 வரை தடுப்பூசி போடப்படாது என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.!!

மருத்துவம்

ஜூன் 3 முதல் 6-ம் தேதி வரை கரோனா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்படும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதத்துக்கான முதல் தவணை தடுப்பூசி டோஸ் 6-ம் தேதி தான் வரும் என்பதால் மேற்கண்ட தேதிகளில் தடுப்பூசி செலுத்தப்படாது.

கடந்த மாதம் தமிழகத்திற்கு 2 மடங்கிற்கு மேல் தடுப்பூசி டோஸ் ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜூன் மாதம் 42.58 லட்சம் தடுப்பூசி டோஸ் ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

மத்திய அரசிடம் இருந்து இந்த மாதத்திற்கான 1.74 லட்சம் தடுப்பூசி டோஸ் வரவேண்டியுள்ளது.என அவர் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *