தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் எதிர்கால பராமரிப்பு குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.!!!

தமிழகம் மருத்துவம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (29.5.2021) தலைமைச் செயலகத்தில்,
கொரோனாவால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் எதிர்கால பராமரிப்பு குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர், நிதித்துறை கூடுதல்
தலைமைச் செயலாளர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளர்
மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *