தமிழகத்தில் 11 மாவட்டங்களில் தளர்வுகள் உடன் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து தமிழக அரசு.!!!

தமிழகம்

தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் நோய்த்தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள் என்பது குறித்து தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவலாக பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ளபோதிலும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் மட்டும் நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது.

* தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* இறைச்சிக்கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

* அனைத்து அரசு அலுவலகங்களும், 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீத டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *