எழும்பூர் மருத்துவமனையில் பாலூட்டும் தாய்மார்கள் 68 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக, மருத்துவமனை இயக்குநர் விஜயா தெரிவித்தார்.!!

சென்னை

எழும்பூர் மருத்துவமனையில்
பாலூட்டும் தாய்மார்கள் :
68 பேருக்கு கொரோனா தடுப்பூசி

சென்னை.ஜீன்.27-

எழும்பூர் தாய் சேய் நலமருத்துவமனையில், பாலூட்டும் தாய்மார்கள் 68
பேர் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக, மருத்துவமனை இயக்குநர் விஜயா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.
எழும்பூர் தாய் சேய் நல
மருத்துவமனையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16 ம் தேதி துவங்கியது.
இதுவரையில், பாலூட்டும் தாய்மார்கள்
68 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது
என்று மருத்துவமனை இயக்குநர் டாக்டர் .விஜயா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *