உலக இதய நாளையொட்டி ராயப்பேட்டை மருத்துவமனையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.!!

சென்னை

இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்
உலக இதய நாள்
விழிப்புணர்வு பேரணி


சென்னை, செப் 29
உலக இதய நாளை முன்னிட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

உலக இதய நாளை முன்னிட்டு இதயத்தை உபயோகித்து இதயத்தோடு தொடர்பில் இருப்போம் என்னும் தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதை மருத்துவமனை இயக்குனர் மணி துவக்கி வைத்தார். இதில் மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி ஆனந்த், மருத்துவ துறை பேராசிரியர் சுலைமான், இதய துறை பேராசிரியர் பாலாஜி பாண்டி, உதவிப் பேராசிரியர் முருகராஜ், இணைப்பேராசிரியர் ரமேஷ் உதவி நிலைய மருத்துவ அதிகாரி தினேஷ், சாய் வித்யா மற்றும் பேராசிரியர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஆரோக்கியமான வாழ்விற்கு இதய நலன் காப்போம், புகைப்பிடித்தலை ஒழிப்போம் மாரடைப்பை தவிர்ப்போம் உள்ளிட்ட இதய நலன் சார்ந்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *