இன்று பதிமூன்று பேர் கொண்ட நிபுணர் குழு கருப்பு பூஞ்சை நோய்த் தொற்றைத் தடுக்க அமைக்கப்பட்டது.!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பாற்றலே சில நேரங்களில் எதிர்வினையாற்றக் கூடிய நிலை ஏற்படும். இதனால், அவர்கள் தீவிரசிகிச்சைக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த சமயத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்டீராய்டு போன்ற நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும் மருந்துகள் வழங்கப்படும். தமிழகத்தில் 921 பேர் கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதில் 95 சதவீதத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் குணமடைந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். […]

Continue Reading

இ பதிவுடன் தன்னார்வலர்கள் உணவுத் தேவையில் உள்ள முதியோர்,மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு உணவளித்து வருகிறார்கள்.!!!

உணவுத் தேவையில் உள்ள முதியோர், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு உணவு கொண்டு செல்லும் தன்னார்வலர்கள், இ-பதிவுடன் செல்லலாம். தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடந்த மாதம் 10-ந் தேதி முதல் 7-ந் தேதி (இன்று) காலை 6 மணி வரை அமலில் இருக்கிறது. இந்த நிலையில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு, அதாவது 14-ந் தேதி காலை 6 மணி வரையிலும் நீட்டித்து, முதல்-அமைச்சர் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதனை […]

Continue Reading

இந்தியாவிற்கு அமெரிக்கா 2.5 கோடி தடுப்பூசிகளை அனுப்பி வைக்கப்படும்-ஜோ பைடன்.!!!

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்கா 2.5 கோடி தடுப்பூசிகளை அனுப்பி வைத்து உதவ முன்வந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்கா 2.5 கோடி தடுப்பூசிகளை அனுப்பி வைத்து உதவ முன்வந்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் இன்றளவிலும் போராடி வருகின்றன. பல நாடுகள் தடுப்பூசிக்கு தவித்து வருகின்றன. இந்தநிலையில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்கா 2.5 கோடி தடுப்பூசிகளை அனுப்பி வைத்து உதவ முன்வந்துள்ளது.இன்றைய தருணத்தில் இது மிகப்பெரிய உதவியாக அமைந்துள்ளது. […]

Continue Reading

வங்கிப் பரிவர்த்தனைகள் ஏற்கனவே அறிவித்ததுபோல பகல் 2 மணி வரை மட்டும் நடைபெறும்.!!!

தமிழகத்தில் ஊரடங்கை சில தளர்வுகளுடன் வருகிற 14-ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து வங்கி வேலை நேரத்தையும் வருகிற 13-ந் தேதி வரை குறைத்து தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது. அதன்படி வங்கி கிளைகள், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். வங்கிப் பரிவர்த்தனைகள், ஏற்கனவே அறிவித்ததுபோல பகல் 2 மணி வரை மட்டும் நடைபெறும். மண்டல அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்கள் வழக்கம்போல, மாலை 5 மணி […]

Continue Reading

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வண்டலூர் மிருக காட்சி சாலையில் கொரோனோ பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சையை நேரில் சென்று ஆய்வு செய்தார்.!!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு நேரில் சென்று, கோவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிய சிங்கங்களை பார்வையிட்டு, அச்சிங்கங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் வனத்துறை உயர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்கள். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு ஊரக தொழிற் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாஹு, இ.ஆ.ப., நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜி. செல்வம், சட்டமன்ற உறுப்பினர் திருமதி எம். […]

Continue Reading

அனைத்து விதமான பொருட்களும் தள்ளுவண்டியில் விற்க அனுமதி.!!!

அனைத்து மாவட்டங்களிலும் தள்ளுவண்டிகள், நடமாடும் வாகனங்கள் மூலமாக காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்ந்து அனுமதிக்கப்படும். தள்ளுவண்டிகளில் பழங்கள், காய்கள் விற்பதற்கான நேரக் கட்டுப்பாட்டை தமிழக அரசு விதித்துள்ளது. இதுகுறித்த உத்தரவை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று வெளியிட்டார். உரிய உள்ளாட்சி அமைப்புகளிடம் முன் அனுமதி பெற்று அவற்றை விற்கலாம். தொலைபேசியிலோ அல்லது ஆன்-லைன் வழியாகவோ ஆர்டர்களை பெற்று பலசரக்கு பொருட்களை வீடுகளுக்கே சென்று வினியோகம் செய்யலாம். இந்த நடவடிக்கைகள் காலை 7 மணி முதல் மாலை […]

Continue Reading

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் தளர்வுகள் உடன் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து தமிழக அரசு.!!!

தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் நோய்த்தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள் என்பது குறித்து தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவலாக பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ளபோதிலும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் மட்டும் நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகமாகவே இருந்து […]

Continue Reading

மீன் அங்காடிக்கு வரும் வியாபாரிகள் அனைவரும் அடுத்த வாரத்துக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.!!!

மீன் அங்காடிக்கு வரும் வியாபாரிகள் அனைவரும் அடுத்த வாரத்துக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.கொரோனா ஊரடங்கு தளர்வுகளுடன் வருகிற 14-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காசிமேடு மீன்பிடி துறைமுக வளாகத்தில் அரசின் மொத்த வியாபாரத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீன்பிடி வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் 12 ஆயிரத்து 52 பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் மீன் விற்பனை வளாகங்கள் […]

Continue Reading

வேல்ஸ் கல்வி நிறுவனங்கள் சார்பில் 1 கோடியே 1 லட்சம் ரூபாய் நன்கொடை.!!!

தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் கல்வி நிறுவனங்கள் சார்பில் 1 கோடியே 1 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. வேல்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர், வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ், தனது மனைவி ஆர்த்தி கணேஷ் மற்றும் மகள் பிரீத்தா கணேஷ் ஆகியோருடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, ரூ. 1 கோடியே 1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

Continue Reading

பெங்களூருவில் கடந்த 2 மாதங்களில் 8,700 பேர் கொரோனாவுக்கு பலி.!!!

பெங்களூருவில் கடந்த 2 மாதங்களில் கொரோனாவுக்கு 7¼ லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 8,700 பேர் இறந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகத்தில் 2-வது அலை வேகமாக பரவி வந்தது. தற்போது அரசின் பல்வேறு நடவடிக்கையால் பாதிப்பு குறைந்து வருகிறது. மாநிலத்தில் தலைநகர் வில் தான் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகளவு உள்ளது. இந்த நிலையில், கடந்த 2 மாதத்தில் வில் வுக்கு 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூருவில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் […]

Continue Reading