விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி விநாயகர் கோவில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடந்தன.சென்னை மற்றும் சென்னை புறநகர் ஆன ஊரப்பாக்கம் குன்றத்தூர் வண்டலூர் கூடுவாஞ்சேரி பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் விதவிதமான விநாயகர் சிலைகளை வழிபாட்டுக்காக வாங்கி சென்றனர்.இந்து அமைப்புகள் சார்பாகவும் சென்னை மற்றும் சென்னை புறநகரில் பிரமாண்ட விநாயகர் சிலைகளை ஆங்காங்கே நிறுவி உள்ளனர் அதனை வழிபட ஏராளமான பொதுமக்கள் இன்று திரண்டு சென்றனர்.இந்த விநாயகர் சிலைகள் இருக்கும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.