சென்னையில் 2 குழந்தைகளை கொன்று கள்ளக்காதலனுடன் தலைமறைவான தாய் அபிராமி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனிப்படை போலீசாரால் கைது செய்யபட்டார் !!!

சென்னை தமிழகம்

சென்னை, செப்டம்பர் .2 கள்ளக்காதல் கண்ணைமறைத்ததால் பெற்ற 2 குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்று விட்டு காதலனுடன் ஓடிய தாய் அபிராமி கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனி படை போலிசாரால் கைது செய்யப்பட்டார் !!
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளையை சேர்ந்தவர் விஜய் (வயது 30). இவர் தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி அபிராமி (வயது 25). இவர்களுக்கு அஜய் (வயது7),கார்மிகா (வயது 4).என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். விஜய் தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் பணிக்கு சென்ற விஜய் , இரவு பணி முடிந்து இன்று அதிகாலை 5 மணி அளவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் மகன் அஜய், மகள் கார்மிகா ஆகிய இருவரும் வாயில் நுரை தள்ளியபடி சடலமாக கிடந்தனர். இதைபார்த்து மனைவியை அழைத்து உள்ளார்.மனைவியை காணாததால் செய்வதறியாமல் குழந்தைகளை பார்த்து கதறி துடித்தார்.

அவரது அளறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்தபோது குழந்தைகள் இருவரும் நுரைதள்ளிய நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி, குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து இரண்டு குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் மகன் மற்றும் மகள் இருவருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு அபிராமி தனது கள்ளக்காதலனுடன் சென்று விட்டதாக தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அபிராமியை கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனிப்படை போலிசார் கைது செய்தனர்.
கள்ளக்காதலனுக்காக 10மாதம் சுமந்து தாலாட்டி சீராட்டி பெற்றெடுத்த இரண்டு குழந்தைகளையும் விஷம் வைத்து கொன்று விட்டு கள்ளக்காதலனுடன் தலைமறைவான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *