பெண் போலீஸ் அதிகாரிகளை மிரட்டிய ரவுடி புல்லட் நாகராஜனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.!!

தமிழகம்

 

தேனியில் பிரபல ரவுடி புல்லட் நாகராஜன் போலீசால் விரட்டி செல்லப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மிகவும் சுவாரசியமாக அரங்கேறி உள்ளது.

புல்லட் நாகராஜ் வெளியிட்ட ஆடியோக்களில் மிக முக்கியமான ஆடியோ என்றால், அது கடைசியாக வெளியிட்ட ஆடியோதான். அதில்தான் போலீசால் என்னை நெருங்க முடியாது, நானே நினைத்தால் தான் என்னை கைது செய்ய முடியும்.

என்று மிகவும் திமிராக பேசி இருந்தார். இந்த நிலையில்தான் தற்போது இவர்  கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக போலீசாரால் பெரிய அளவில்  திட்டம் தீட்டப்பட்டு இன்று அதிரடியாக கைது செய்தனர்.

 

(ரவுடி நாகராஜனிடம் கைப்பற்றப்பட்ட போலி பத்திரிக்கை அடையாள அட்டை மற்றும் பணம், ஆயுதங்கள் )

பெரியகுளத்தில் கைது செய்த புல்லட் நாகராஜிடம் இருந்து இரண்டு கல்லதுப்பாக்கி மூன்று கத்திகள் மற்றும் 2000 ரூபாய் உள்ளிட்ட கள்ள நோட்டுகள் அரசு முத்தி திரைகளும் வழக்கறிகர் மற்றும் பத்திரிக்கை போலி அடையாள அட்டை நாகராஜரிடம் மிருந்து பறிமுதல் செய்துதென்கரை காவல்துறை விசாரித்து வருகின்றன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *