சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கான மளிகை பொருட்கள் வாகனங்களை அமைச்சர்கள் மா.சுப்ரமணியம், பி.கே.சோகர் பாபு கொடியசைத்து துவக்கி வைத்தனர்.!!

தமிழகம் வணிகம்

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் வணிகர் சங்கங்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு மளிகைப் பொருட்களை
வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யும் நடமாடும் மளிகை வாகனங்களை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு
துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்களும், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்
திரு. பி. கே. சேகர்பாபு அவர்களும் இன்று (31.05.2021) பட்டாளம், ஸ்ட்ராஹான்ஸ் சாலையில் உள்ள திரு.வி.க.நகர் மண்டல
அலுவலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் முதன்மை செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி
ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி
அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.சிவகுமார் (எ) தயாகம் கவி அவர்கள், திரு.இ.பரந்தாமன், மத்திய வட்டார இணை
ஆணையாளர் திரு.பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., அவர்கள், துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) திரு.விஷூ மகாஜன், இ.ஆ.ப.,
அவர்கள், மண்டல அலுவலர் திரு.எம்.பரந்தாமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *