வரிச்சீர்திருத்தத்தால் தொழில் செய்வது எளிமையாகியுள்ளது என மோடி தெரிவித்து உள்ளார் !!

சென்னை

வரிச்சீர்திருத்தத்தால் தொழில் செய்வது எளிமையாகியுள்ளது பிரதமர் மோடி தெரிவித்தார். வரிச்சீர்திருத்தத்தால் தொழில் செய்வது எளிமையாகியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.உத்தரக்கண்ட் மாநிலம் டேராடூனில் முதலீட்டாளர் மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதன் பின் பேசிய அவர், நாட்டின் வரிமுறையை மேம்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். வரிமுறையை வெளிப்படையான மற்றும் விரைவானதாக மாற்ற முயல்வதாகத் தெரிவித்தார்.திவால் நிலைச் சட்டத்தின் மூலம் நாட்டில் தொழில் செய்வது எளிதாக்கப்பட்டுள்ளதாகவும் மோடி தெரிவித்தார். நாட்டில் வங்கி அமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மோடி தெரிவித்தார். ஆற்றல், கொள்கை, செயல்திறன் ஆகியவை வளர்ச்சியின் மூலங்களாகத் திகழ்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *