காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் இருவரின் உடல்கள் டெல்லியிலிருந்து தனி விமானத்தில் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட தமிழக வீரர் சிவச்சந்திரன் உடலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சென்று வீர வணக்கம் செலுத்தினார்.வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்தார்.