மத்திய சென்னை தொகுதி 109-வது வார்டு தேர்தல் பணி வாக்குச்சாவடி முகவர்களுக்கு தி.நகர் சத்தியா எம்எல்ஏ, எஸ் ஆர் விஜய குமார் எம்பி அறிவுரை.!!

சென்னை

.மத்திய சென்னை தொகுதி 109-வது வார்டு தேர்தல் பணி
வாக்குச்சாவடி முகவர்களுக்குஎம்.பி., எம்எல்ஏ அறிவுரைசென்னை, மார்ச் 30
நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என தி.நகர் பி.சத்தியா எம்.எல்.ஏ, எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி., அறிவுறுத்தி உள்ளனர். 

மத்திய சென்னை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர்  சாம்பால் போட்டியிடுகிறார். அவர் பிரச்சாரத்தை தொக்கு வகைகள் சேகரித்து வருகிறார் இந்நிலையில் ஆயிரம் விளக்கு பகுதி 109-வது தெற்கு வட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்  வட்டச்செயலாளர் பி.ராஜேஷ் தலைமையில்  நடைபெற்றது. இதில் தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளரும் தி நகர் சட்டமன்ற உறுப்பினருமான டி நகர் பி சத்தியா,தொகுதி பொறுப்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார்  ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர். அப்போது தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டுமென்றால் வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். தினமும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும் என கேட்டு கொண்டனர்.இதில் பகுதி செயலாளர் நுங்கை மாறன், வழக்கறிஞர் சதாசிவம், முன்னாள் கவுன்சிலர்கள் புஷ்பாநகர் ஆறுமுகம், டி.சிவராஜ், நிர்வாகிகள் பி.ராமமூர்த்தி, தீபிகா பில்டர்ஸ் கருணாகரன், பார்த்தசாரதி, ரகு, எம்.எம்.டி.ஏ கண்ணன், ஹாஜா முகைதீன், சுல்தான் ,எம்.உசேன் எம்.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *