அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் V.V. செந்தில்நாதனை ஆதரித்து பள்ளப்பட்டி பெரிய பள்ளிவாசலில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் ஆகியோர் தொழுகை முடித்து வந்த இஸ்லாமிய பெருமக்களிடம் வாக்கு சேகரிப்பு.!!

தமிழகம்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பேரூராட்சி பெரிய பள்ளிவாசலில் அதிமுக வேட்பாளர் V.V.செந்தில்நாதனை ஆதரித்து வெள்ளிக்கிழமை தொழுகை முடித்து வந்த இஸ்லாமிய பெருமக்களிடம் அமைச்சர்கள் K.C.வீரமணி, DR.நிலோபர் கபீல், தமிழ்நாடு வக்ஃப் வாரிய மு.தலைவரும் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளருமான அ.தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் இரட்டை இலை சின்னத்திற்கு மாண்புமிகு அம்மா அரசின் சாதனைகளை சொல்லி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகளும் கூட்டணி கட்சியினரும் திரளாக வந்திருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *