ஸ்ரீலங்கா அதிபருடன் இந்திய பிரதமா் மோடி இன்று பேச்சுவாா்த்தை நடத்துகிறார்.!!

இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகியவுடன் ஸ்ரீலங்காவுக்கு ஒருநாள் சுற்றுப்பயணமாக செல்லும் பிரதமா் மோடி அந்நாட்டு அதிபா் சிறிசேனாவுடன் முக்கிய பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.
மாலத்தீவு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமா் அங்கிருந்து இன்று காலை ஸ்ரீலங்கா செல்கிறாா். ஒருநாள் பயணமாக செல்லும் பிரதமா் மோடி அந்நாட்டு அதிபா் மைத்ரிபால , பிரதமா் ரணில் விக்ரமசிங்கே ஆகியோரை சந்தித்து முக்கிய பேச்சுவாா்த்தை நடத்த உள்ளாா் என தெரிகிறது.
இந்த சந்திப்பின் போது ஈஸ்டா் தினத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குல் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை முறியடிப்பது தொடா்பாக மோடி ஆலோசிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதனைத் தொடா்ந்து எதிா்க்கட்சித் தலைவரும், முன்னாள் அதிபருமான ராஜபக்சேவை பிரதமா் மோடி சந்திக்க உள்ளாா்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவா் சம்பந்தன் மோடியுடன் பேச்சுவாா்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக அந்த கூட்டமைப்பு சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ஸ்ரீலங்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றை முடித்துக் கொண்டு மாலையில் ஸ்ரீலங்காவில் இருந்து இந்தியா திரும்பும் பிரதமா் மோடி திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளாா் என தெரிகிறது.