ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை இன்று சென்னை வருகை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பொன்மாணிக்கவேல் பெற்றுக்கொண்டார்.!!

தமிழகம்

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட  பழங்கால நடராஜர் சிலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்டு இன்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தடைந்தது. எச்டி பொன்மானிக்கவேல் பெற்றுக்கொண்டார். வெளிநாடுகளில் இன்னும் 20 சிலைகள் உள்ளன என பொன்மானிக்கவேல் தெரிவித்தார்.!!
நடராஜர் சிலையை கொண்டு வந்த பொன்.மாணிக்கவேல் சென்னையில் அளித்த பேட்டியில், “37 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட சிலையை நாங்கள் கண்டுபிடித்து கொண்டு வந்துள்ளோம். நாம் கும்பிடும் சாமி சிலைகள் வெளிநாட்டில் காட்சிப் பொருளாக வைக்கப்படுகின்றன. சிலைகள் கடத்தல் வழக்கில் தமிழக அரசை குறை சொல்ல விரும்பவில்லை. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 20 சிலை வரவேண்டி உள்ளன. 20 சிலைகளை கொண்டு வர அந்தந்த நாடுகளுக்க கடிதம் எழுதி உள்ளேன. சொந்த ஓய்வூதியத்தில் சிலைகளை கண்டுபிடிக்கும் எனக்கு எந்த அகம்பாவவோ ஆணவமோ இல்லை” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *