ம இ.கா (மலேசிய இந்தியன் காங்கிரஸ்) இரண்டு நாள் தேசிய மாநாடு சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளாங் வட்டாரத்தில் நடைபெற்றது.!!

சென்னை

ம இ.கா (மலேசிய இந்தியன் காங்கிரஸ்) இரண்டு நாள் தேசிய மாநாடு சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளாங் வட்டாரத்தில் நடைபெற்றது.!!

ம.இ.கா சார்பில் வருடாந்திர பேராளர் 74வது மாநாடு சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளாங் வட்டாரத்தில் நடைபெற்றது. ம.இ.கா தேசிய தலைவர் டான்ஸ்ரீ.எஸ். விக்னேஸ்வரன் மற்றும் டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமையில் நடைபெற்றது.கோவிட் பாதுகாப்பு சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்த மாநாட்டில் வரும் தேர்தல் பற்றி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதல் நாள் மாநாட்டில் மகளிர் பிரிவு, புத்ரா, புத்திரி இளைஞர் மாநாடு நடந்தது. இதில் மலேசியாவில் உள்ள அனைத்து மாநில ம.இ.கா நிர்வாகிகளும் பங்கேற்றனர். 2ம் நாள் மாநாடு இன்றும் ம.இ.கா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ். விக்னேஸ்வரன் மற்றும் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தலைமையிலும் நடைபெற்றது. இந்நிகழ்வு ஜும் எனப்படும் காணொளி காட்சி மூலம் மலேசிய பல்வேறு மாநிலங்களில் இருந்து ம.இ.கா நிர்வாகிகள் பங்கேற்றனர். படம் -செய்தி உதவி பரிமளா கிருஷ்ணன்(ம.இ.கா பத்துமலை கிளைதலைவி

படம் -செய்தி உதவி பரிமளா கிருஷ்ணன்(ம.இ.கா பத்துமலை கிளைதலைவி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *