திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் குருக்கள்களுக்கு திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் உதவி.!!

சென்னை

 

கோரோனோ ஊரடங்கு காரணமாக கோவில்கள் தரிசனம் தடை செய்யப்பட்டுள்ளது இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் குருக்கள்களுக்கு திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நிவாரண உதவி செய்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் கோயில்கள் அனைத்திலும் பொதுமக்கள் தரிசனம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சேப்பாக்கம் – திருவல்லிவேணி தொகுதியில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் குருக்கள்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட ஊரடங்கு கால நிவாரணப் பொருட்களை  சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சிற்றரசு, திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் ஏ.ஆர்.பி.எம். காமராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *