ம.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் துரை. பாலகிருஷ்ணன் மறைவு! வைகோ இரங்கல்

சென்னை

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர், ஆருயிர்ச் சகோதரர் துரை.பாலகிருஷ்ணன் அவர்கள், உடல் நலக் குறைவால் இயற்கை எய்திய செய்தி அறிந்து பேரிடியாய் என் தலையில் விழுந்தது. உடைந்து நொறுங்கிப் போனேன். 27 ஆண்டுகளாக, எந்த சபலத்திற்கும், சஞ்சலத்திற்கும் இடம் கொடுக்காமல், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை உயிருக்கும் மேலாக நேசித்துப் பணியாற்றி வந்தார்.

திராவிட இயக்க உணர்வாளர். இளைஞராகத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து, ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். துடிப்பான செயல்வீரர். அதனால், மக்களின் பேரன்பைப் பெற்று, ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராக மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டார்; தஞ்சாவூர் மாவட்டக் கவுன்சில் உறுப்பினர், ஒரத்தநாடு ஊராட்சி ஒ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *