முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்.!!!

தமிழகம் வணிகம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (25.5.2021) தலைமைச் செயலகத்தில், முழு ஊரடங்கு காலத்தில்
பொதுமக்களுக்கு காய்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் எல்லா பகுதி மக்களுக்கும் தங்குதடையின்றி விநியோகம் செய்வது
குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன், மாண்புமிகு வேளாண்மை –
உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர், வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு),
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், வேளாண்மைத் துறை இயக்குநர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையர், கூட்டுறவு
சங்கங்களின் பதிவாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *