வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கொரோனா நோய் தொற்றால் சிங்கங்கள் கவலைக்கிடமாக உள்ளது ஒரு சிங்கம் பலி.!!!

சென்னை தமிழகம் மருத்துவம்

வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் ஒரு சிங்கம் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகத்தினுடைய கோரிக்கையை ஏற்று, மேற்படி சிகிச்சைக்காக மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் அனுப்பி வைத்தது.

இந்நிலையில், 11 சிங்கங்களிடம் மூக்கு மற்றும் மலவாயிலிருந்து மாதிரிகள் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மத்தியப் பிரதேசத்தின் போபாலில் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு நோய் தேசிய நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த மாதிரிகளின் பரிசோதனை முடிவுகளின்படி 9 சிங்கங்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *