தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய தகவல்களைமாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.!!!

மருத்துவம்

தமிழகத்தில் படிப்படியாக கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளானோர் குணமடைந்து வருகிறார்கள்.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 97 ஆயிரத்து 299 ஆக உயர்ந்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் இன்று 19,448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த
எண்ணிக்கை 22 லட்சத்து 56 ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தினசரி ஆயிரத்திற்கு மேல் குறைந்து கொண்டு இருக்கிறது.

தமிழகத்தில் தற்போது 2,32,026 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 1,530 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *