இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோ விச் கோ வித் பாக்ஸிங் இரண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.!!!

மருத்துவம்

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி திட்டத்தின்கீழ் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

தடுப்பூசி போட்டும் கொரோனா வந்தால், உயிரிழப்பு நேராது என்று எய்ம்ஸ் ஆஸ்பத்திரி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த 2 தடுப்பூசிகளில் எதை ஒருவர் போட்டுக்கொண்டாலும், முதல் டோஸ் போட்டு குறிப்பிட்ட இடைவெளியில் அதே தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்வது முக்கியம்.

ஆனால் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும், 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களையும் கூட கொரோனா தொற்று பாதித்து இருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெனிவந்தன.

தடுப்பூசி போட்டும், கொரோனா வந்தாலும் அவர்களுக்கு உயிரிழப்பு போன்ற ஆபத்து நேர்வதில்லை என்று தெரிய வந்துள்ளது.

இது குறித்த ஆய்வை டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி நடத்தி உள்ளது.

2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு கொரோனா வந்த 36 நோயாளிகளும், ஒரு டோஸ் போட்டு தொற்று பாதிப்புக்குள்ளான 27 பேரும் என 63 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவர்களில் 10 பேர் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள். எஞ்சியவர்கள் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்.

இவர்கள் 21 முதல் 92 வயது வரையிலானவர்கள். 41 பேர் ஆண்கள். 22 பேர் பெண்கள். இவர்களில் யாருமே நீரிழிவு, உயர் ரத்த அழுத்த அழுத்தம் உள்ளிட்ட இணைநோய் இல்லாதவர்கள்.

நோயாளிகளின் உடலில் தடுப்பூசியால் நோய் எதிர்ப்பு பொருள் உருவாகி இருந்தாலும், தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற நோயாளிகளைப்போலவே ஆஸ்பத்திரியில் சேர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் யாருக்கும் மரணம் நேரவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *