கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் சட்டபேரவை கூட்டம் தொடங்கியது.!!

தமிழகம்
தமிழ்நாட்டின் 16 -வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித்  உரையுடன் தொடங்கியது.கவர்னர்  தனது உரையை வணக்கம் என தமிழில் தொடங்கினார். மேலும், தமிழ் இனிமையான மொழி. எளிமையான வாழ்க்கையை வாழுங்கள் என்று பேசினார்.
சட்டசபை தோதலுக்கு பிறகு நடைபெறும் தமிழ்நாடு புதிய சபையின் முதல் கூட்டத்தொடர் என்பதால், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி தொடக்கிவைத்துள்ளார். கவர்னர் உரை நிறைவடைந்ததும், சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அவைத் தலைவர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜூன் 22) முதல் பேரவைக் கூட்டம் தொடா்ந்து நடைபெறும். வரும் வியாழக்கிழமை (ஜூன் 24) வரை கூட்டத் தொடா் நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, ஜூன் 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் உரையின் மீதான விவாதம் நடைபெறும். பிறகு, ஜூன் 24-ஆம் தேதி கவர்னர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலுரையாற்றுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *