திருக்கோயில் பணியாளர்களுக்கு இலவச கொரோனோ தொற்று பரிசோதனை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.!!

தமிழகம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கெரோனோ இல்லாத தமிழ்நாடு என்ற நிலையில் கொண்டுவர அமைச்சர்களுக்கும் மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் இதன் தொடர்ச்சியாக சென்னை பெரம்பூர் லட்சுமி மஹாலில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சென்னை 1 மற்றும் 2வது மண்டலத்தில் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்குமான இலவச கரோனா நோய் தொற்று பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் இ. ஆ. ப,எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் மற்றும் அறநிலை துறை உயர் அதிகாரிகளும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *