பிரதமர் மோடி ஹெலிக்காகாப்டரில்கேரள வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களை பார்த்தார் !!

சென்னை

கேரளாவில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட இடங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.500 கோடியை ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார்.

கேரளா பெய்த தொடர் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை அம்மாநிலத்தில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்தியா முழுவதும் உள்ள மாநில முதல்வர்கள், முண்ணனி நடிகர்கள் மற்று தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவி செய்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *