ராதாரவியின் ‘டத்தோ’ பட்டம் போலி என்று கூறிய சின்மயிக்கு பதிலடி கொடுத்த ராதாரவி !!

சென்னை
  • ராதாரவியின் ‘டத்தோ’ பட்டம் போலி என்று கூறிய சின்மயிக்கு பதிலடி கொடுத்த ராதாரவி !!

ராதாரவி தனது பெயருக்கு முன்னால் ‘டத்தோ’ என்ற பட்டத்தை போடுவார். அப்படி ஒரு பட்டம் அவருக்கு வழங்கப்படவில்லை என்று சின்மயி அண்மையில் கூறியிருந்தார். இதுக்கு ராதாரவி தற்போது பதில் அளித்துள்ளார். அதில அவர் சின்மயி எல்லா விசயங்களிலும் பொய் பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். கவிஞர் வைரமுத்து மீது பொய்யான புகார் தெரிவித்து ‘பிளாக் மெயில்’ பண்ண பார்த்தார். முடியவில்லை. இப்போது என்னிடம் வந்து இருக்கிறார். என்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை. உண்மை மட்டுமே இருக்கிறது. மலேசியாவில் ‘டத்தோ’ பட்டம் யார் யார் வழங்குகிறார்கள். என்ற விவரம் கூட தெரியாமல் இருக்கிறார். நான் பட்டம் பெற்றதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.தற்போது புதுக்கோட்டையில் இருக்கிறேன். இன்னும் ஓரிரு நாளில் சென்னை திரும்புவேன். சென்னை வந்ததும் ஆதாரங்களை வெளியிடுவேன் என்று கூறியுள்ள அவர். சின்மயியை சும்மா விடப்போவதில்லை. எனக்கு பட்டம் தந்தவர்களே அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள்” என்று ஆவேசமாக பேசியுள்ளார்.ராதாரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *