சென்னையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா தமிழ் திரையுலகமே திரண்டது.!!

சென்னை

சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இசைஞானி இளையராஜாவுக்கு நடைபெற்ற பாராட்டுவிழாவில் தமிழகத்திலுள்ள பிரபல சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர் . இந்நிகழ்ச்சியில் ரஜினி பேசிய போது கமலுக்கு தான் ஹிட் பாடல் கொடுத்திருக்கிறார்-இளையராஜா விழாவில் ரஜினி பேச்சு!
கலைகள் அத்தனையிலும் சிறந்தது இசைக் கலை தான். மற்ற கலைகளுக்கெல்லாம் முதன்மையாக இருப்பதும் இசை கலை தான், அதனால் இசை கலைஞர்கள் மீது எனக்கு மரியாதை அதிகமாக உருக்கும். சில லிங்கம் நீரில் உருவாகும், சில லிங்கம் மனிதனால் உருவாக்கப்படும், சுயம்புவாகவும் சில லிங்கம் உருவாகும், இளையராஜா சுயம்பு லிங்கம் போன்றவர், அது அபூர்வமாகவே உருவாகும், அது வெளிப்படும் போது அதன் சக்தியும், அதிர்வும் அபாரமாக இருக்கும். அன்னக்கிளியில் ஆரம்பித்த அந்த அபூர்வ சக்தியை இப்போது வரை பார்க்கிறேன். நான், அவரை சார்னு தான் கூப்பிடுவேன், திடீர்னு ஒருநாள் பேண்ட் சர்ட்டிலிருந்து வேட்டி ஜிப்பாவுக்கு மாறினார், அந்த நிமிஷ்த்துலயிருந்து அவரை சாமினு கூப்பிட ஆரம்பிச்சுட்டேன், என்னை, அவரும் சாமினு தான் கூப்பிடுகிறார், மன்னன் படத்தில் என்னை பாட வச்சார், எனக்கு நிறைய பாடல் போட்டிருக்கார். ஆனால், என்னை விட கமலுக்கு தான் நிறைய ஹிட் பாடல் கொடுத்திருக்கார்.
என ரஜினி சொன்னதும், குறுக்கிட்ட இளையராஜா,இவர் இப்படி சொல்றார், அவர கேட்டா, ரஜினிக்கு போட்ட மாதிரி எனக்கு ஏன் பாட்டு போட மாட்டேங்கிறீங்க என சொல்வார் என பதில் தந்தார் இளையராஜா பிறகு மேடைக்கு வந்த கமல்ஹாசனும் அதை அமோதிப்பது போல சொன்னார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *