நடிகர் விஜய் சேதுபதி சி.சி.டி.வி கேமரா அமைப்பதின் அவசியம் குறித்து தயாரிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகட்டை வெளியிட்டார்.!!

சென்னை

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், டிஜிகாப்” (DIGICOP) என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தினார். இதனை தொடர்ந்து சி.சி.டி.வி கேமரா அமைப்பதன் அவசியம் குறித்து தயாரிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகடு மற்றும் சென்னை பெருநகர காவல் துறையில் உள்ள காவல் நிலையங்களில் புது பொலிவுடன் விளங்கும் காவல் நிலையங்கள் பற்றி தயாரிக்கப்பட்டுள்ள குறுந்தகட்டை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட அதை கமிஷனர் அ.கா.விசுவநாதன் பெற்றுக் கொண்டார் .இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *